கந்தஷஷ்டி விரத உற்சவம் – 2025

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் எதிர்வரும் 22-10-2025ம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

இவ்வருடம் கந்தஷஷ்டி விரதம் 22-10-2025 புதன்கிழமை கும்ப வைப்பு நிகழ்வுடன் ஆரம்பமாகி 27-10-2025 திங்கட்கிழமை சூரன் போர் நிகழ்வுடன், ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது.

22-10-2025 புதன்கிழமை கந்தஷஷ்டி விரத உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வாக காலை 9.00 மணியளவில் கும்ப வைப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

விரதம் அனுஷ்டிக்கும் மெய்யடியார்கள் நேரகாலத்திற்கு வருகைதந்து கும்பவைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு விரத உத்தியானம் செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

அதனைத் தொடர்ந்து விஷேட அபிஷேகம், விசேட பூஜாராதனைகள் நடைபெற்று கந்தபுராணப் (சூரபன்மன் வதைப்படலம்) படிப்பு நடைபெறும்.

கந்தஷஷ்டி விரத உற்சவ நாட்களில் பகல் பூஜாராதனைகள் நிறைவடைந்த பின்னர் சர்க்கரைத் தண்ணீர், ஆலய திருமடத்தில் அன்னதானம் என்பன நடைபெற்று பகல் நிகழ்வு நிறைவு பெறும்.

தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் வசந்த மண்டபத்தில் விஷேட பூஜாராதனைகள் இடம்பெற்று, மங்கல வாத்தியங்களுடன் வள்ளி தேவசேனா சமேத முருகையா சுவாமி அலங்கார ரூபமாய் எழுந்தருளி உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து கந்தபுராணப் படிப்பு நடைபெற்று மாலை உற்சவம் நிறைவு பெறும்.

இவ்வாறாக தொடர்ந்து ஐந்து நாட்களும் உற்சவ நிகழ்வு நடைபெற்று கந்தஷஷ்டி விரத இறுதி நாளான 27-10-2025 திங்கட்கிழமை மாலை சூரசம்மார நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

சூரசம்மார நிகழ்வைத் தொடர்ந்து ஆலயத்தில் பிராயச்சித்த அபிஷேகம், விஷேட பூஜை, கும்பச் சரிப்பு நிகழ்வு என்பன நடைபெற்று அன்றைய நிகழ்வு நிறைவு பெறும்.

அன்றிரவு பாரணைப் பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று மறுநாள் 28-10-2025 செவ்வாய்க்கிழமை காலை 6-30 மணியளவில் பாரணை பூஜை நடைபெறும்.

திருக்கல்யாண உற்சவம்
28-10-2025 செவ்வாய்க்கிழமை பாரணைப் பூஜை முடிவடைந்த பின்னர் முற்பகல் 10.00 மணியளவில் அபிஷேகம் நடைபெற்று விஷேட பூஜாராதனையுடன் தெய்வயானையம்மன் திருக்கல்யாண உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான கந்தபுராணப் படிப்பு நடைபெறும்.

அன்றைய தினம் மாலை தெய்வானையம்மன் திருக்கல்யாண விழா வெகு கோலாகலமாக நடைபெற்று தொடர்ந்து எம்பெருமான் வெளிவீதி உலா வந்தருளுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சூரபன்பன் திக்கு விஜயம்
கந்தஷஷ்டி விரதோற்சவ ஐந்தாம் நாளன்று 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00மணியளவில் சூரபன்மன் திக்கு விஜயம் இடம்பெறும்

கந்தஷஷ்டி விரதோற்சவ நாட்களில் அனைத்து அடியார்களும் ஆலயத்திற்கு வருகை தந்து அங்கு நடைபெறும் அனைத்து விஷேட உற்சவ நிகழ்வுகளிலும் கலந்து எம்பெருமானின் திவ்விய தரிசனம் கண்டு தரிசித்து திருவருளைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கந்தஷஷ்டி விரத உற்சவ உபயகாரர்கள் விபரம்

22-10-25 புதன்- 1ம் நாள் – திரு. ஆ.அழகராசா குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

23-10-25 வியாழன் – 2ம் நாள் – திரு. சி.ஈசுரபாதம் குடும்பத்தினர்- நாகர்கோவில் தெற்கு – திரு. தா.வல்லிபுரம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

24-10-25 வெள்ளி – 3ம் நாள் – திரு. வே.சிதம்பரநாதன் குடும்பத்தினர் – நாகர்கோவில் தெற்கு

25-10-25 – சனி – 4ம் நாள் – திரு. ந.சபாரத்தினம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

26-10-25 ஞாயிறு – 5ம் நாள் – திரு. மா.சாம்பசிவம் குடும்பத்தினர்- நாகர்கோவில் கிழக்கு

27-10-25 திங்கள் – 6ம் நாள் – சூரன் போர் – பொது

28-10-25 செவ்வாய் – பாரணை பூஜை – பொது

28-10-25 செவ்வாய்க்கிழமை – தெய்வானையம்மன் திருக்கல்யாண உற்சவம் – திரு.மு.சிவானந்தம் (நாள்சீட்டு) குழுவினர் நாகர்கோவில் வடக்கு

29-10-25 புதன்கிழமை – வைரவர் மடை – ஆலய பிரதம குரு திரு.வ.மகேஸ்வரக்குருக்கள்- நாகர்கோவில் கிழக்கு

முருகையா அடியார்களே!
சூரசம்மார உற்சவ நிகழ்வு, பாரணை அன்னதான நிகழ்வு ஆகியன பொதுப் பூஜையாக நடைபெறவுள்ளதால் எம்பெருமான் உள்ளூர், வெளிநாட்டு அடியார்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை வழங்குவதுடன், பாரணைக்குரிய அன்னதானப் பொருட்களை கொடுத்துதவுமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.

விரதகாரர் கட்டணம் – 1.500 ரூபா

குறிப்பு
தற்கால பொருட்களின் விலையேற்றத்தினை கருத்தில் கொண்டு இவ்வருடம் கந்தசஷ்டி விழா உபயத்திற்கான செலவுத்தொகை ஒரு லட்சம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

நிர்வாக சபையினர்