வருடாந்த மஹோற்சவம் – 2025

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 08-08-2025 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை வைரவர் மடையுடன் நிறைவடைய திருவருள் கைகூடியுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

மஹோற்சவ விபரம் இதோ!

05-08-2025 செவ்வாய்க்கிழமை- கொடிச்சீலை ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வருதல்
உபயம் – கந்தையா சிவபாதசுந்தரம் குடும்பத்தினர் – பருத்தித்துறை

06-08-2025 புதன்கிழமை – முகூர்த்தக்கால் நாட்டுதல்
உபயம் – கணபதிப்பிள்ளை சிவப்பிரகாசம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

07-08-2025 வியாழக்கிழமை மாலை – கர்மாரம்பம், விநாயகர் பூஜை, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, நவக்கிரக சாந்தி
உபயம் – வயிரமுத்து கந்தசாமி குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

1. 08-08-2025 வெள்ளிக்கிழமை – துவஜாரோகணம் (கொடியேற்றம்)
உபயம் – கந்தையா சிவபாதசுந்தரம் குடும்பத்தினர் – பருத்தித்துறை

2. 09-08-2025 சனிக்கிழமை – வேத பாராயணத் திருவிழா
உபயம் – நாகர்கோவில் தெற்கு கிராம மக்கள்

3. 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை – திருமுறை பாராயணத் திருவிழா
உபயம் – கந்தையா கணபதிப்பிள்ளை குடும்பம், வேலுப்பிள்ளை கந்தசாமி குடும்பம் – நாகர்கோவில் மேற்கு

4. 11-08-2025 திங்கட்கிழமை – கடம்பவனத் திருவிழா
உபயம் – மயில்வாகனம் பாலகுமார் குடும்பத்தினர் – பருத்தித்துறை

5. 12-08-2025 – செவ்வாய்க்கிழமை – பக்தி முத்தி பாவனோற்சவம்
உபயம் – நாகமுத்து தவராசா குடும்பத்தினர் – நாகர்கோவில் கிழக்கு

6. 13-08-2025 புதன்கிழமை – தைலாப்பியங்கத் திருவிழா
உபயம் – நா.சுப்பிரமணியம் சின்னத்தம்பி (ஆலய முன்னாள் அறங்காவலர்) குடும்பத்தினர் – கனடா

7. 14-08-2025 – வியாழக்கிழமை – மாம்பழத் திருவிழா
உபயம் – ஆறுமுகம் நவரத்தினசாமி குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

8. 15-08-2025 – வெள்ளிக்கிழமை – தெப்பத் திருவிழா
உபயம் – சிதம்பரப்பிள்ளை தங்கம்மா குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

9. 16-08-2025 – சனிக்கிழமை – மஞ்சத் திருவிழா
உபயம் – நல்லதம்பி சபாரத்தினம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

10. 17-08-2025 – ஞாயிற்றுக்கிழமை – தினைப்புனத் (பூங்காவனம்) திருவிழா
உபயம் – ஆறுமுகம் அழகராசா குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

11. 18-08-2025 திங்கட்கிழமை – வசந்தோற்சவம்
உபயம் – வீரகத்தி சின்னாச்சிப்பிள்ளை குடும்பத்தினர் – நாகர்கோவில் கிழக்கு

12. 19-08-2025 செவ்வாய்க்கிழமை – திருக்கல்யாணத் திருவிழா
உபயம் – குமாரசாமி தங்கரத்தினம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

13. 20-08-2025 புதன்கிழமை – வேட்டைத் திருவிழா
உபயம் – அருணாசலம் கண்ணையா குடும்பத்தினர்- நாகர்கோவில்
நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர் – நாகர்கோவில்

14. 21-08-2025 வியாழக்கிழமை – சப்பரத் திருவிழா
உபயம் – ஆறுமுகம் மயில்வாகனம் குடும்பத்தினர் – அவுஸ்திரேலியா

15. 22-08-2025 வெள்ளிக்கிழமை – காலை இரதோற்சவம் (தேர்த் திருவிழா)
உபயம் – பொது மக்கள்

16. 23-08-2025 சனிக்கிழமை – காலை தீர்த்தத் திருவிழா, மாலை கொடியிறக்கம்
உபயம் – பொது மக்கள்

17. 24-08-2024 ஞாயிற்றுக்கிழமை – காலை பிராயச்சித்த அபிஷேகம், மாலை வயிரவர் மடை
உபயம் – ஆலய பிரதம குரு – வ.மகேஸ்வரக் குருக்கள்

முருகையாவின் மெய்யடியார்களே!
வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய விழாக்களான தேர் மற்றும் தீர்த்த உற்சவங்கள் இரண்டும் பொதுத் திருவிழாக நடைபெறவிருப்பதால் தாயக, புலம்பெயர் அடியார்கள் அனைவரும் பெரிதும் மனமுவந்து நிதி நன்கொடைகளை வாரி வழங்கி இரண்டு திருவிழாக்களும் சிறப்பாக நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தங்களை பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்