தை மாத கார்த்திகை உற்சவம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் தை மாதம் 22ம் (04-02-2017) திகதி சனிக்கிழமை தை மாத கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். 

அன்றைய தினம் மாலை 3.00 மணியளவில் மூல மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை இடம்பெறவுள்ளது.

சிறப்பு பூஜையைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக காட்சியளிக்கும் அனுக்கிரக மூர்த்தியாகிய எம்பெருமானுக்கு விசேட தூப, தீபங்கள் அடங்கிய சோடசோபசார ஆராதனைகள் நடைபெற்று உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது.

நண்பகல் கந்தபுராணம் (கந்தவிரதப் படலம்) படனம் ஓதுவார்களினால் வாசிக்கப்பட்டு பயன் விரித்துக் கூறும் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்பெருமான் அடியாரகள் அனைவரும் மேற்படி உற்சவ சிறப்பு பூஜையில் தவறாது கலந்துகொண்டு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு முருகையாவை தரிசித்து இஷ்ட சித்திகளையும், திருவருளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

உபயகாரர் – ஆறுமுகம் – மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்திரேலியா

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு