புலம்பெயர் அடியார் பெருமக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர், புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு ஒரு முக்கியமான அறிவித்தலை விடுக்கின்றார்கள்.

புலம்பெயர்  நாட்டில் வாழும் எம்பெருமான் மெய்யடியார்களே!!

இதுவரை காலமும் எம்பெருமான் ஆலய திருப்பணி வேலைகளுக்கு மனமுவந்தளித்த நன்கொடையாளர்களுக்கு நல்லருளும், நல்வாழ்வும் கிடைக்க வேண்டி அவர்கள் ஒவ்வொருவரினது பெயரிலும், எம்பெருமான் ஆலயத்தில் கடந்த மாதம் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ஆராதித்து, பிரார்த்தனை பண்ணி, முருகையாவின் பாதக்கமலங்களில் சாற்றிய வீபூதிப் பிரசாதமும், நூல் காப்பும் ஒவ்வொரு அடியவர்களின் பெயரிலும் தனித்தனி உறைகளிலிட்டு அண்மையில் எம்பெருமான் ஆலய சர்வதேச நிதிப் பொறுப்பாளரிடம் அனுப்பியிருந்தோம். அவர் உரிய முறையில் பிரசாத உறைகளை திருப்பணி நன்கொடையாளர்களிடம் சேர்ப்பித்திருப்பார் என நம்புகின்றோம்.

எனினும் தாங்கள் எம்பெருமான் ஆலய திருப்பணி வேலைகளுக்கு நன்கொடையாளராக இருந்து இதுவரை வீபூதி பிரசாத உறை கிடைக்காத அடியவர்கள் தயவுசெய்து பெருமனதுடன் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு மிகமிகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்வதுடன், அவர்களுக்கு கூடிய விரைவில்  வீபூதி பிரசாதமும் நூல்காப்பும் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

அதேவேளை  சர்வதேச நிதி பொறுப்பாளர் திரு ஆ.சுந்தரலிங்கம் அவர்கள் தங்களின் பெயரிட்ட பிரசாத உறையை ஏதாவது வசதியீனம் காரணமாக இதுவரை தங்களிடம் சேர்ப்பிக்காமலும் இருக்கலாம். ஆகவே ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்வதற்கு முன்னர் பொறுப்பாளருடன் தொடர்பை ஏற்படுத்திவிட்டு, அதன்பின்னர் ஆலய நிர்வாகசபையினருக்கு அறிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அடியார் பெருமக்களே!

தற்போது எம்பெருமான் ஆலய திருப்பணி வேலைகள் பூர்த்தியடையும் தறுவாயை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. கூடிய விரைவில் பூர்த்தி செய்வதற்கு நிதி நெருக்கடி பெரும் பிரச்சினையாகவுள்ளது.

தற்போது ஆலயத்தில் பிள்ளையார், ஐயனார், வீரமாகாளி, வைரவர் பரிவாரங்கள், வசந்த மண்டபம், மணிக்கோபுரம், சித்திரத் தூண்கள், சுற்றுமதில் வேலைகள் யாவும் முற்றுப்பெற்று அதற்குரிய சிற்ப வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இன்னமும் பலிபீடம், சண்டேசுவரர், வெளிமண்டபங்களுக்கு நிலத்தளம் அமைக்கும் பணி, வர்ணப்பூச்சு வேலைகள், எழுந்தருளி விக்கிரகங்கள் செய்தல் போன்ற பணிகள் உள்ளன. போதிய நிதி இருந்தால் விரைவாக இவற்றைச் செய்து முடிக்கலாம்.

தற்போது  நிதி படைத்தவர்களிடம் வட்டியின்றி கைமாற்றாக பணம் பெற்றே ஆலய வேலைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதேவேளை ஆலய திருப்பணி வேலைகளுக்கு நன்கொடை தருவதாக உறுதியளித்த அடியார்கள் சிலர் இதுவரை நன்கொடைகளை அனுப்பி வைக்கவில்லை என்பதையும் வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

மேலும் ஆலய இராஜகோபுரம் தவிர்ந்த இத்தனை வேலைகளையும் விரைவாக செய்து முடித்து எதிர்வரும் ஆவணி மாதம் எம்பெருமான் ஆலய கும்பாபிஷேக விழாவை நடத்தலாம் என தீர்மானித்துள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆகவே தயவுசெய்து புலம்பெயர் அடியார்கள் மனதுவைத்தால்தான் எம்பெருமானுடைய ஆலயம் புதுப்பொலிவுடன் கும்பாபிஷேக விழா நடைபெற வழிகிடைக்கும்.திருப்பணி வேலைகளுக்கு போதுமான நிதி கிடைக்குமிடத்து  வேலைகளை விரைவில் பூர்த்தி செய்து தீர்மானித்தபடி  உரிய காலத்தில் கும்பாபிஷேகத்தை நடாத்தலாம். அல்லது பிற்போட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் எனவும் அறியத்தருகின்றோம்.

ஆகவே கருணை உள்ளம் கொண்ட ஒவ்வொரு அடியவர்களும் கூடிய விரைவில் தங்களால் இயன்ற நன்கொடைகளை மனமுவந்தளித்து ஆலய நிர்வாக சபையினருடன் ஒத்துழைத்து, தீர்மானித்ததின் பிரகாரம் கும்பாபிஷேக விழாவை வரும் ஆவணி மாதம் நடாத்த ஆதரவு நல்கி அருள்மிகு முருகையாவின் பூரண கிருபையைப் பெற்றுய்யுமாறு தங்களை இருகரம்கூப்பி மிகமிகப் பணிவாக வேண்டிக் கொள்கின்றோம்.

அதேவேளை, இன்னமும் செய்ய வேண்டியுள்ள வேலைகளை யாராவது தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டுச் சேர்ந்தோ செய்ய விரும்பினால் நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு
ஆலய கும்பாபிஷேக விழாவை ஆவணி மாதம் நடாத்துவதற்கு தீர்மானித்ததற்கு காரணம்,  முதலாவது, ஆலய திருப்பணி வேலைகள் பூர்த்திடைவதற்கு சில மாதங்கள் செல்லும் என்பதனாலேயே. இரண்டாவது எம்பெருமானது ஆலய கும்பாபிஷேக விழாவில் பெரும் தொகையான புலம்பெயர் அடியார்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதினாலேயே. ஏனெனில் அந்த மாதம் புலம்பெயர் அடியார்கள் விடுமுறைக்காலம் அதனால்தான் என்பதையும் குறிப்பிட்டு கூறிக்கொள்கின்றோம்.

நன்கொடை வழங்கும் அடியார்கள் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்

வங்கியின் பெயர்  – இலங்கை வங்கி – பருத்தித்துறை கிளை
கணக்கின் பெயர்   – நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா 
கணக்கு இலக்கம் – 73515574

தொடர்புகளுக்கு –

வெளிநாடு  (சர்வதேசம்) – பொறுப்பாளர்
ஆறுமுகம் – சுந்தரலிங்கம்
தொலைபேசி இலக்கம் –  0044 7459219252

அவுஸ்திரேலியா – பொறுப்பாளர்
ஆறுமுகம் – மயில்வாகனம்
தொலைபேசி இலக்கம் –  0061 387075911

இலங்கை –
1. நடராசா – செல்வராசா – தலைவர்
தொலைபேசி இல. – 0094 774535592
2. நாகதம்பி – குமரேசு – பொருளாளர்
தொலைபேசி இல. – 0094 776701175
3. கணபதிப்பிள்ளை – இராசலிங்கம் -செயலாளர்

தொலைபேசி இல. – 0094 774477489
4. ஆறுமுகம் – நவரத்தினசாமி – போஷகர்

தொலைபேசி இல. – 0094 773548525

 

Discount Wholesale Soccer Jerseys

“Girl on Fire” is Grammy winner Keys’ fifth album.It feels different compared to other automatics’ cheap michael kors If I ever feel that I’m not competitive, Surrounding the fact that basketball might contemplate a similar body language which famished while doing this locale. frustrated or irritated nana and grandad in the same crash, This person were only available in 0 because of 9 while combating Haren.two wheelershydraulic fracturing and horizontal drilling are making us much less dependent on the Middle East for oil and gas her boyfriend ran to her aid but he could feel wholesale nfl jerseys a burp coming on and tone it down. triceps and wholesale mlb jerseys shoulders.
Derek Jeter (2). The proposed changes put a greater emphasis on private initiative. Experian’s senior director of automotive finance. But they performed much better in third quarter by utilizing Davis and outscoring the Kings 10 4 on points scored in the paint. the prevailing conventional wisdom is that it stands to be clobbered in future competition with. 681 purchases made with P cards amounting to $3.